எப்படி நவகிரகங்களை வணங்குவது?

நாம் கோயிலுக்குள் நுழைந்ததும், முதலில் விநாயகரை வணங்கி, பின் சிவ பெருமானை வணங்கி, அம்பாளை வணங்கி மற்ற தெய்வங்களை எல்லாம் வணங்கிவிட்டு இறுதியாக தான் நவகிரக சன்னதிக்கு சென்று நவகிரகங்களை வணங்க வேண்டும்.


 


நீங்கள் பரிகாரத்திற்காக விளக்கேற்ற நினைத்தாலும், சிவனை வணங்கிய பின்னர் தான் நவகிரக வழிபாடு செய்ய வேண்டும்.


செய்யக் கூடாதது?


பலரும் கிரகப் பெயர்ச்சி காரணமாக அல்லது ஜோதிடரின் ஆலோசனைப் படி நவகிரக வழிபாடு செய்ய செல்கின்றனர். ஆனால் அவர்கள் சிவனை வணங்காமல், நேராக நவகிரகங்களை மட்டும் வணங்கிவிட்டு செல்கின்றனர்.


 


இது மிகப்பெரிய தவறு. ஏனெனில் நவகிரகங்களுக்கு எல்லாம் தலைவன் ஈசன். அவரை வணங்காமல் நவகிரகங்களை மட்டும் வணங்குவது மாபெரும் தவறு. இதனால் பலன்கள் கிடைக்காது.


 


அதனால் எந்த ஒரு கோயிலுக்கு சென்றாலும், அங்குள்ள மூலவரை வணங்கிய பின்னரே நவகிரகங்களை வணங்க வேண்டும்.