சபரிமலை என்பதில் சபரி என்பதே பெண்தானாம்... ஆனா பெண்களுக்கு நோ என்ட்ரி... யார் அந்த சபரிங்கிற பெண்...

சபரி மலைக்கு அந்த பெயர் வருவதற்குக் காரணமே ஒரு பெண் தானாம். யாார் அந்தப் பெண். அந்த மலைக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.



சபரிமலை என்ற வார்த்தையே கேட்பவர்களைப் பக்தி பிரவாகமெடுக்க வைக்கும். மெய்ஞானம் தரும் சில திருத்தலங்களில் சபரிமலையும் ஒன்று என்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயம். சரி. சபரிமலை ஐய்யப்பனின் அருளைப் பற்றி கேட்டால் நாள் கணக்கில் பேசுவார்கள். அதிலும் கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டால், எட்டு திசைகளிலும் ஒலிக்கும் குரலாக ஐய்யப்பனின் நாமம தான் இருக்கும். ஆனால் சபரிமலைக்கு ஐய்யப்பனை தரிசிக்கும் முன் நன்கு தெரிந்தவர்கள் சபரி பீடம் என்னும் பகுதியைச் சென்று வணங்கி, அங்கே தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி வழிபட்டுச் செல்வார்கள்.